பள்ளிபாளையம் அருகே விதிகளை மீறி செயல்பட்ட ஆம்புலன்ஸ் பறிமுதல்

பள்ளிபாளையம் அருகே விதிகளை மீறி இயங்கிய தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்

Update: 2023-12-28 14:24 GMT

பறிமுதல் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ்

பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் கணபதிபாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது குமாரபாளையத்தில் இருந்து வந்த தனியார் காரை நிறுத்தி சோதனை செய்தனர் . அந்த கார் ஆம்புலன்ஸாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது .

இதனை அடுத்து காரை பறிமுதல் செய்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News