கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்!

கந்தர்வக்கோட்டையில் கிராவல் மண் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-21 14:40 GMT

கந்தர்வக்கோட்டையில் கிராவல் மண் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


புதுகை மாவட்ட புவியியல் சுரங்கத் துறை ஆய்வாளர் செந்தில்நாதன் கந்தர்வகோட்டை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தார். அப்போது வல்லம் பகுதியில் இருந்து கந்தர்வகோட்டை நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை யிட்டபோது, அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து கந்தர்வகோட்டை போலீசில் ஒப்படைத்தார். லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News