அனுமதி இன்றி மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

காரிமங்கலம் அருகே ஏரியிலிருந்து அனுமதி இன்றி மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2024-06-27 02:04 GMT
அனுமதி இன்றி மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

காரிமங்கலம் அருகே ஏரியிலிருந்து அனுமதி இன்றி மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.


  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக ஏரிகளில் இருந்து மண் கடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து காவலர்கள் டிப்பர் லாரி உரிமை யாளர் பாலு மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News