மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்

மானாமதுரை போலீசார் முத்தனேந்தல் - கட்டிக்குளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அத்துமீறி மணல் கடத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-07-02 03:04 GMT

மானாமதுரை போலீசார் முத்தனேந்தல் - கட்டிக்குளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அத்துமீறி மணல் கடத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.  

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகர் காவல் நிலைய போலீசார் முத்தனேந்தல் - கட்டிக்குளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மணல் கடத்தி வந்த மினி வேன் மற்றும் இருசக்கர வாகனத்தை வழிமறித்தனர். போலீசாரை பார்த்த அவர்கள் வாகனத்தை விட்டு விட்டு தப்பிச் சென்றனர். இதனையடுத்து போலீசார் இரு வாகனங்களை பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News