சட்ட தன்னார்வல தொண்டர்கள் தேர்வு; விண்ணப்பிக்க மே 20 கடைசி நாள்

தஞ்சாவூரில் சட்ட தன்னார்வல தொண்டர்கள் தேர்வுக்கு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-05-10 16:35 GMT

பைல் படம்

தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி, தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்திற்கு (கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாபநாசம், திருவையாறு, பேராவூரணி, திருவிடைமருதூர்) புதிதாக 50 சட்ட தன்னார்வல தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இல்லை.

18 வயதிற்கு மேற்பட்டவர்களாக மட்டும் இருக்க வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகள், ஓய்வு பெற்ற அரசு மற்றும் அரசு சாரா அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பகுதி நேரப் பணியாளர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் சட்ட தன்னார்வலர் தொண்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பப்படிவத்தை Thanjavur E-court WEBSITE--ல் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து வருகிற மே.20- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, முதன்மை மாவட்ட நீதிபதி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தஞ்சை என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்க வேண்டும்.  20-ஆம்  தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். சட்டத் தன்னார்வலர் தொண்டர்கள் பணியானது சட்ட சேவை மட்டுமே. உத்தியோகம் இல்லை. இது தற்காலிகமானது. மேலும் சட்ட தன்னார்வலர் தொண்டர் பணிக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படாது. சேவைக்கு ஏற்ப மதிப்பூதியம் மட்டுமே அளிக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News