டூ வீலரில் கஞ்சா விற்பனை - 4 பேர் கைது, 1 கிலோ பறிமுதல்

வந்தவாசியில் போலீசார் நடத்திய சோதனையில் டூ வீலரில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டு, 1 கிலோ கஞ்சா மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-02-19 04:21 GMT

கைதானவர்கள் 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சந்தேகத்திற்கு இடமான பைக்கை மடக்க முயன்றனர் ஆனால் பைக்கை நிறுத்தாமல் வேகமாக மர்ம நபர்கள் ஓட்டி சென்றனர் பைக்கை பின்தொடர்ந்த காவலர்கள் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர் அப்போது முகமது ரஃபி மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர் இவர்களிடம் விசாரித்த போது மேலும் இருவர் கஞ்சாவை வைத்திருப்பது தெரியவந்து அவர்களை பின் தொடர்ந்து மீசை நல்லூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் அகமது, பரத் ஆகியோரை மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்து வீச்சருவாள்,1கிலோ கஞ்சா பாக்கெட்கள்,50 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து டிஎஸ்பி ராஜு தலைமையில் 4 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News