சேத்துப்பட்டு : வியாபாரிகள் சார்பில் சென்னைக்கு நிவாரண பொருட்கள்

Update: 2023-12-08 03:12 GMT

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள வியாபாரிகள் சேத்துப்பட்டு உள்ள அனைத்து வியாபாரிகள் சார்பாக நிவாரண பொருட்கள் சென்னைக்கு திமுக நகர செயலாளர் இரா முருகன் சரக்கு வாகனத்தை அனுப்பி வைத்தார். சேத்துப்பட்டு காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் அனைத்து வியாபாரிகள் பொதுமக்கள் சார்பாக நிஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை நகர மக்களுக்கு, நிவாரண பொருட்களாக குடி தண்ணீர் பாட்டில், பால்,பிஸ்கட் ,ரொட்டி அத்தியாவசிய பொருட்களை சேகரிக்கப்பட்டு அவற்றை சென்னை முகாமுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.திமுக நகர செயலாளர் இரா. முருகன் ,சேத்துப்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் நிவாரண பொருட்களை பொதுமக்களிடம் பெற்ற வியாபாரிகள் ரவி முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயன்,கன்னியப்பன் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து வாகனத்தை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News