முத்துகொண்டாபுரம் அருகே தெருவில் ஓடும் கழிவுநீர் நோய் பரவும் அபாயம்

முத்துகொண்டாபுரம் அருகே தெருவில் ஓடும் கழிவுநீர் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-03-29 17:41 GMT
வழிந்து ஒடும் கழிவுநீர்

திருவாலங்காடு ஒன்றியம் முத்துக்கொண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெருவில், 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதியில்லாததால், தெருவின் சாலையோரம் உள்ள குடியிருப்பு பகுதியில், திறந்த நிலையில் ஆறுபோல கழிவுநீர் ஓடுகிறது. 

 இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், பகுதிவாசிகள் அடிக்கடி நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, இப்பகுதிவாசிகளின் நலனை கருத்தில் கொண்டு, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News