நரசிங்கபுரம் சொர்ணபுரீசுவரர் ஆலயத்தில் சனி பிரதோச வழிபாடு
ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ சொர்ணபுரீசுவரர் ஆலயத்தில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;
Update: 2024-04-07 03:11 GMT
சனி பிரதோஷம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சொர்ணபுரீசுவரர் ஆலயத்தில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது, இதைனையடுத்து ஆலயத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால் , சந்தனம்,மஞ்சள, நீர்,தேன், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து வில்வம் அரளி தாமரை மல்லிகை அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வ மலர்களால் அர்ச்சனை செய்தையடுத்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சனிபிரோதச விழாவில் நந்திபகவானை தரிசித்தனர்.