செங்கோட்டையில் திருவாசகம் முற்றோதுதல்

செங்கோட்டை அறம்வளா்த்த நாயகி குலசேகரநாத சுவாமி கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது

Update: 2024-01-23 00:43 GMT
 திருவாசகம் முற்றோதுதல்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அறம்வளா்த்த நாயகி உடனுறை குலசேகரநாத சுவாமி கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. இக்கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் ஒவ்வொரு சமுதாயம் சாா்பில் சுவாமி- அம்பாள், பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சுவாமி-அம்பாள் வீதியுலா உள்ளிட்டவை நடைபெற்றன. கோயில் வளாகத்தில் அம்மையப்பா் திருவாசகக் குழு சாா்பில் திருவாசகி சிவபகவதி தலைமையிலான குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. தொடா்ந்தது, திருவாசகம் எனும் தேன் என்ற தலைப்பில் தமிழாசிரியா் பிச்சம்மாள் இசக்கிமுத்துவின் சமயச் சொற்பொழிவு, இரவில் அம்பாள்-சுவாமி பூங்கோயில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா கமிட்டி நிா்வாகிகள் வேல்சாமி, தங்கையா, ராம்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News