பொள்ளாச்சி அருகே "YOGA 10"வடிவில் அமர்ந்து பத்மாசனம் செய்து அசத்தல்

பத்தாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-21 10:28 GMT

யோகா தின கொண்டாட்டம்

பத்தாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது - இந்நிகழ்ச்சியில் 100 மாணவர்கள் "YOGA 10" என்ற வடிவில் அமர்ந்து பத்மாசனம் செய்தனர்.. பொள்ளாச்சி..ஜூன்..21 சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன அதுமட்டுமின்றி யோகாசனத்தில் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஒன்றாக யோகா செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த யோகா நிகழ்ச்சியில் 100 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வந்து அமர்ந்து பத்தாவது உலக யோகா தினத்தை குறிக்கும் வகையில் "YOGA 10" என்ற எழுத்து அமைப்பு வடிவில் அமர்ந்து மாணவர்கள் பத்மாசனம் செய்து அசத்தினர்.

Tags:    

Similar News