சிவகாசி சிவன் சன்னதில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சிவகாசி சிவன் சன்னதில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.

Update: 2024-06-24 12:17 GMT
சிவகாசி சிவன் சன்னதில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.. பாதுகாப்புக்காக போலீஸார் குவிப்பு..

சிவகாசி சிவன் கோயில் வடக்கு வாசல் 96 ஆண்டுகளுக்கு பிறகு சிவ பக்தர்களின் பெரும் முயற்சியால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.ஆனால் வடக்கு வாசல் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் இருந்ததால் வடக்கு வாசல் வழியாக செல்வதில் பக்தர்கள் பெரும் சிரமத்தை சந்தித்த சிவ பக்தர்கள் பெரும் மனஉளைச்சல் அடைந்தனர்.

வடக்கு வாசல் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் அதே பகுதியில் கடைகள் வைக்கப்பட்டன.இதனை கேள்விப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கடை உரிமையாளர்களை கடுமையாக எச்சரிக்கை செய்து மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். வடக்கு வாசலை மறித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர்.

Tags:    

Similar News