சிவகாசி பங்குனி பொங்கல் தேரோட்ட திருவிழா !

சிவகாசி பங்குனி பொங்கல் தேரோட்ட திருவிழாவில் குவிந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-04-11 10:34 GMT
சிவகாசி பங்குனி பொங்கல் தேரோட்ட திருவிழாவில் குவிந்த ஏராளமான பக்தர்கள்....
சிவகாசி ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் தேரோட்ட திருவிழா.ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா, கடந்த 31ம் தேதி (ஞாயிறு கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகியது,கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றவுடன் ஸ்ரீமாரியம்மன் ஒவ்வொரு நாளும் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பங்குனி பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திருவிழா அதிவிமர்ச்சியாக நடைப்பெற்றன.தேரோட்ட நிகழ்சியில் சிவகாசி மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.திருவிழா ஏற்பாடுகளை, சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News