பட்டாசு வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசுகளை வாகனத்தில் எடுத்து சென்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-15 07:00 GMT
பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசு 
விருதுநகர் மாவட்டம், சிவகாசி - வெம்பக்கோட்டை ரோடு தனியார் சுவீட் கடை பகுதியில் சிவகாசி டவுன் எஸ்ஐ அய்யனார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர், அப்போது அந்த வழியாக சென்ற 4 சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில்,அந்த வாகனத்தில் ரூ.5ஆயிரம் மதிப்பிலான பேன்சி ரக பட்டாசுகள் அனுமதி இன்றி சட்டவிரோதமாக வைத்திருப்பது தெரிய வந்தது.இது குறித்து சாத்தூர் அருகே நடுச்சூரங்குடியைச் சேர்ந்த முருகன் மகன் பாலு (20) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News