பொங்கல் கொண்டாட்டம் - ஒரே நாளில் ஆறு கோடிக்கு விற்பனையான மது

திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு நாளில் ரூபாய் ஆறு கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

Update: 2024-01-19 00:50 GMT

ஆறு கோடிக்கு மது விற்பனை 

திருவாரூர் மாவட்டத்தில் 99 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். இதனைத் தொடர்ந்து மது பிரியர்கள் பொங்கல் பண்டிகை அன்று மது பாட்டில்களை வாங்கி குவித்தனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்தது .திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை அன்று ஒரே நாளில் ரூபாய் ஆறு கோடி மதிப்பிலான பீர் மற்றும் மது வகைகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News