பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது!
பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டார்கள்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-24 12:15 GMT
கைது
இலுப்பூர் அருகே உள்ள பாப்பான்குளம் பகுதிகளில் பொதுஇடத்தில் சூதாட்டம் விளையாடுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் பாப்பான்குளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த இலுப்பூர் பகுதியை சேர்ந்த கெனடி, பழனிசாமி, குமார், சின்னப்பன், சகாபுதீன், தர்மராஜ், உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.