கஞ்சா வைத்திருந்தவருக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை !
கஞ்சா விற்பனை வழக்கில் கைதான குற்றவாளிக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் தீர்ப்பளித்தார்.
Update: 2024-04-26 06:36 GMT
கம்பம் வடக்கு காவல் நிலைய காவல்துறையினரால் கடந்த 2018 ஆம் ஆண்டு சின்ன என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 10.250 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக குற்றவாளி சின்னனுக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் தீர்ப்பளித்தார்.