காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திறன் போட்டி

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திறன் போட்டி நடந்தது.

Update: 2024-06-30 14:26 GMT

திறன் போட்டி 

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி உத்தரவின் பேரில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 72 பள்ளிகளில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் என்ற சாதியற்ற சமத்துவம் சம்பந்தமான திறன் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 550 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகா, பாணாவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, ஆற்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, ராணிப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சோளிங்கர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News