சிவகாசியை குளிர்வித்த மழை

சிவகாசியில் ஜில் என்று குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2024-05-17 11:26 GMT
சிவகாசியில் ஜில் என்று குளிர்ந்த காற்றுடன் மழை.மக்கள் மகிழ்ச்சி...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்று பகுதியான திருத்தங்கல், S.N.புரம், பாறைப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, விளாம்ப்ட்டி, வடமலாபுரம், ரிசர்வ் லயன், சாட்சியார்புரம் போன்ற பகுதியில் காலை முதல் மூட்டமாக காணப்பட்ட நிலையில் குளிர்ந்த காற்றுடன் மிதமான கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் நகர் பகுதியில் பல இடங்களில் மழை நீர் தேங்கியும்,கழிவு நீர் ரோட்டில் செல்வதில் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். மாநகராட்சி சார்பாக மழைநீர் தேங்கி இருக்கும் இடத்தையும், கழிவு நீர் ரோட்டில் செல்லும் இடத்தையும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News