திருச்சி விமான நிலையத்தில் ரூ 37 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், ரூ. 37.39 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

Update: 2024-02-13 04:12 GMT

திருச்சி பன்னாட்டு விமான நிலையம் 

அபுதாபியிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான்நுண்ணறிவுப் பிரிவினா் சோதனைகளுக்கு உள்ளாக்கினா். அதில் பயணி ஒருவா் உடலுக்குள் (அடிவயிற்றில்) பசைவடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் சோ்த்து, சிகிச்சை மூலம் தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. 580 கிராம் உடைய அந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 37.39 லட்சம் என தெரியவந்தது. இதையடுத்து திங்கள்கிழமை அந்த நபரை கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல்செய்து சுங்கத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Tags:    

Similar News