காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது!

அறந்தாங்கி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்த போலீசார் கடத்தப்பட்ட 750 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-26 04:24 GMT

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி 

 புதுக்கோட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் நேற்று அறந்தாங்கியில் இருந்து கே.புதுப்பட்டி செல்லும் சாலையில் வாகன தணிக்கை செய்தனர். அவர்கள் தணிக்கை செய்த கார் ஒன்றில் 15 சாக்கு மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி இருந்தது. அதையும் காரையும் பறிமுதல் செய்து கார் டிரைவர் அம்புராணியைச் சேர்ந்த பெரிய கருப்பன் (எ)பிரபு (35)வை கைது செய்தனர்.
Tags:    

Similar News