தேனி : ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்தனர்

Update: 2023-12-23 09:07 GMT

சொர்க்கவாசல் திறப்பு

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை திருமஞ்சனம், சுப்ரபாதம், திருப்பாவை மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 5-30 மணி அளவில் சொர்க்க வாசலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்ட டது. அதன் பின்பு ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கூடியிருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ரெங்கா ரெங்கா என குரல் எழுப்பி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News