திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

Update: 2023-12-08 01:18 GMT
எஸ்பி ஆய்வு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் திடீரென ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டார். பின்னர் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு, அதனை விரைந்து முடிக்குமாறும் அங்கிருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News