வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு

வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி ஹர்ஷ் சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

Update: 2024-02-21 08:20 GMT

எஸ்பி ஆய்வு 

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இன்று 21.02.2024 வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்பு காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் முறையாக உள்ளதாய் என ஆய்வு செய்தார்கள், மேற்படி காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியதுடன், இரவு நேரங்களில் அதிகப்படியான காவலர்களை ரோந்து அமர்த்தவும், யாரேனும் சந்தேகிக்கும் படி இரவில் சுற்றித்திரிந்தால் அவர்களை உடனடியாக கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.
Tags:    

Similar News