விழுப்புரத்தில் போலீசாரை பாராட்டிய எஸ்.பி

விழுப்புரத்தில் போலீசாரை பாராட்டி வெகுமதி எஸ்.பி வழங்கினார்

Update: 2024-07-04 14:38 GMT

சான்றிதழ் வழங்கிய மாவட்ட எஸ்பி 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மழவந்தாங்கள் சோதனை சாவடி அருகே 1.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் வாகன சோதனையின் போது கைப்பற்றிய உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார்,

அனந்தபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சுப்பிரமணி, தமிழ் நாடு சிறப்பு காவல் படை 15-ஆம் அணி காவலர்கள் விஜயராஜ், ஏழுமலை ஆகியோரின் பணியினை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்தார்.

உடன் விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் தனிபிரிவு ஆய்வாளர் தங்க குருநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News