அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள்

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Update: 2024-07-04 03:23 GMT
புகைப்படம்

அமாவாசையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 170 சிறப்பு பஸ்களும், புதுச்சேரி, விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வேலூர், ஆற்காடு, காஞ்சீபு ரம், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து மேல்மலையனூருக்கு 125 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. மேலும் 7-ந்தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான 5, 6, 7-ந்தேதிகளில் அரசு பஸ்களில் பயணிகள் அதிகளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் பொதுமக்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய இடங்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) 105 பஸ்களும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 165 பஸ்களும், 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 90 பஸ்களும் ஆக மொத்தம் 360 சிறப்பு பஸ்கள் மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஓசூர், திருவண்ணாமலை (வழி-ஆற் காடு, ஆரணி), திருவண்ணாமலை (வழி - காஞ்சீபு ரம், வந்தவாசி ) ஆகிய இடங்களுக்கு கூடுதலாக நாளை 30 பஸ்களும், நாளை மறுநாள் 30 பஸ்களும் என மொத்தம் 60 பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே, பயணிகள் தங்களின் பயணத்தை முன் கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன் படுத்திக்கொள்ளலாம். மேலும் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப பஸ்களை இயக்கவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News