சங்கரன்கோவில் அருகே உயர் கல்விக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சங்கரன்கோவில் அருகே உயர் கல்விக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-06-12 15:07 GMT
சங்கரன்கோவில் அருகே உயர் கல்விக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஆ. மருதப்பசெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் உயர் கல்விக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி Voice Of Tenkasi பவுண்டேஷன் சார்பில் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பாக நடைபெற்றது. இது போல் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News