கால்நடைகளுக்கு நாளை சிறப்பு மருத்துவ முகாம்

சேலம் மாவட்டம், தப்பக்குட்டை பகுதியில் நாளை கால்நடை மருத்துவ முகாம் நடைபெற உள்ளதால் விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-04 11:01 GMT

கால்நடை மருத்துவ முகாம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்குட்பட்ட தப்பக்குட்டை ஊராட்சி பாலிகண்ணன் காடு முருகன் கோவில் பகுதியில் தமிழக அரசு சார்பில் (பிப்ரவரி 5 திங்கள்) கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளன.

இம்முகாமில் கால்நடைகளின் பல்வேறு நோய்க்கு சிகிச்சை அளித்தல், பிபிஆர் தடுப்பூசி போடுதல், சினைப் பரிசோதனை செய்தல், சினைப்பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சை அளித்தல் மற்றும் விவசாயிகளிடமிருந்து கிசான் கடன் அட்டை பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளதால் இம்முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News