பூதிமுட்லு ஶ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை

பூதிமுட்லு ஶ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-06-30 01:39 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த சிறப்பு பூஜையில் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News