கமலக்கண்ணியம்மனுக்கு சிறப்பு பூஜை!

சோளிங்கரில் கமலக்கண்ணி அம்மனுக்கு சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது.

Update: 2024-06-25 12:53 GMT

சோளிங்கரில் கமலக்கண்ணி அம்மனுக்கு சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது.


ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் உள்ள கமலக்கண்ணியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக காலையில் சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் மூலவர் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவர் அம்மனுக்கு மகா கற்பூர தீபாரதனை கட்டப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News