ஸ்ரீ பரம கல்யாணி அம்பாளுக்கு சிறப்பு பூஜை

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி அம்பாளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-11 06:17 GMT

சிறப்பு அபிஷேகம்

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பரம கல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீ சிவசைல நாதர் கோவிலில் பங்குனி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று காலையில் நடராஜருக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம்,இளநீர் உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரத்தனையும் நடைபெற்றது. இதில் ஆழ்வார்குறிச்சி, கடையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News