சேலம் வழியாக பாட்னா-மங்களூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

சேலம் வழியாக பாட்னா-மங்களூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம். ரெயில்வே கோட்டம் அறிவிப்பு.

Update: 2024-06-14 05:47 GMT

சிறப்பு ரெயில் இயக்கம்

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சேலம் வழியாக பாட்னா-மங்களூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பாட்னா- மங்களூர் சிறப்பு ரெயில் (03243) நாளை மற்றும் வருகிற 22,29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) பாட்னா ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு விஜயவாடா கூடூர், பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திங்கட்கிழமை இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு மங்களூர் சென்றடையும். இதேபோல் மங்களூர்- பாட்னா சிறப்பு ரெயில் (03244) வருகிற 18,25 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) மங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக புதன்கிழமை காலை 6.27 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், விஜயவாடா வழியாக வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு பாட்னா சென்றடையும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News