சௌதாபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

பள்ளிபாளையம் அடுத்துள்ள சௌதாபுரம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-01 05:35 GMT

கலைஞரின் கனவு இல்ல திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம் 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் சௌதாபுரம் ஊராட்சியில் ,நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி நந்தகோபால் தலைமை தாங்கினார். இதில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து பொதுமக்களிடம் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் எடுத்துரைத்து பேசினர் .வசிக்க சொந்த வீடு இல்லாமல், நிலம் மட்டும் உள்ள மக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தின் அடிப்படையில் ,தமிழக அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது. பயன்பெற விரும்பும் பயனாளிகள் ,உரிய ஆவணங்களை உடனடியாக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் வழங்கினால், தமிழக அரசின் மானிய நிதியை பெறுவதற்கான அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தனர். மேலும் அரசு திட்டத்தில் கட்டப்பட்ட பழைய வீடுகள் பழுது பார்த்தல் குறித்தும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. முதல் கட்டமாக கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News