சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிப்பாடு

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிப்பாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-04-15 09:49 GMT

சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பழமையும், புராதான வரலாறும் கொண்ட சிறுவாச்சூர் மதுரா காளியம்மன் ஆலயத்தில், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் கோவில் திறக்கப்பட்டு சாமி தரிசனம் நடைபெறும், இந்நிலையில் சித்திரை 1ஆம் தேதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி மதுரகாளியம்மனுக்கு திருமஞ்சனம் மஞ்சள், சந்தனம், பால், தயிர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,

இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துக்கு பிறகு மகா தீபாரதனை நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, மாவிடித்து படையலிட்டு சாமி தரிசனம் செய்தனர். இக்கோவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு குலதெய்வமாக விளங்கி வருவதால், பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு புது வருட பிறப்பில் இந்தாண்டு முழுவதும் நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டி சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர் . கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் வழிபட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News