சற்குரு தியான மையத்தில் தை அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

தர்மபுரி பூபதி திருமண மண்டபம் அருகே சற்குரு தியான மையத்தில் தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-10 01:22 GMT

சிறப்பு பூஜை

தர்மபுரி நகரப்பகுதியில் அமைந்துள்ள பூபதி திருமண மண்டபம் அருகே சற்குரு தியான மையத்தில் தை அமாவாசை முன்னிட்டு சத்குரு சுவாமிக்கு உணவுகள் பழங்கள் படையல் இட்டு சற்குரு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. சற்குரு தியான மையத்தில் தர்மபுரி சுற்றுலா பல்வேறு பகுதியிலிருந்து கடைவீதி, குமாரசாமிபேட்டை,காந்தி நகர்,அப்பா நகர்,அண்ணா நகர்,இலக்கியம்பட்டி,செந்தில் நகர்,பாரதிபுரம்,போன்ற பகுதியில் இருந்து பக்தர்கள் தை அமாவாசை முன்னிட்டு காலை முதல் நள்ளிரவு சத்குரு தியான மையத்தில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பிறகு பக்தர்களுக்கு அனைவருக்கும் சத்குரு சாமிக்கு படைக்கப்பட்ட உணவு பிரசாதங்களை அனைவருக்கும் வழங்கப்பட்டது. சற்குரு தியான மையத்தில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற வேண்டும் என்று தீபங்களை ஏற்றி வழிபட்டனர். சற்குரு தியான மையம் அறக்கட்டளை தலைவர் காளியப்பன் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News