மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டி சிறப்பு யாகம்
வந்தவாசி அருகே அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-21 07:27 GMT
மாணவர்கள் யாகம்
வந்தவாசி அருகே அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டி சிறப்பு யாகம். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் உள்ள பிர சித்திபெற்ற சுந்தரவல்லி சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும்பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் 300 மாணவ, மாணவியர்கள் பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.