திருப்பனந்தாள் ஸ்ரீ அருணாசடேஸ்வரர் தேவஸ்தானத்தில் ஆன்மீக சொற்பொழிவு

திருப்பனந்தாள் ஸ்ரீ அருணாசடேஸ்வரர் தேவஸ்தானம் தலைமையில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

Update: 2024-06-20 06:29 GMT
திருப்பனந்தாள் ஸ்ரீ செஞ்சடையப்பர் ஆலயத்தில் திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதினம் திருப்பனந்தாள் ஸ்ரீ அருணாசடேஸ்வரர் தேவஸ்தானம் தலைமையில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. மகாசக்தி நாகதேவதை சக்தி பீடத்தின் செயலாளர் தீபா அறிமுகவுரை ஆற்றினார். மகாசக்தி நாக தேவதை சக்தி பீடம் ஶ்ரீஶ்ரீ நாகபாலன் சுவாமிகள் சத்திய வழியில் ஆன்மீக தேடல் தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். அப்போது கலியுக காலத்தில் நாம் அறவழியில் நடக்கவும், தீயவழி விலகுதலும் வேண்டும். நாம் போகையில் எதையும் எடுத்துச் செல்ல முடியாது, எனவே தருமத்தைச் செய்யுங்கள், அதுவே அடுத்த பிறவியை நீக்கி இறைவனடி நம்மைச் சேர்க்குமென அருளுரை வழங்கினார். இதில் திருப்பனந்தாள் தமிழாசிரியர் தமிழ் ஒளி சண்முகநாதன், வழக்கறிஞர் சௌந்தர் சிவச்சந்திரன் மற்றும் பக்தக் கோடிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News