புதுக்கோட்டையில் விளையாட்டுப் போட்டி: அமைச்சர் தொடங்கி வைப்பு

புதுக்கோட்டையில் குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-02 13:40 GMT
விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்

புதுக்கோட்டை மௌண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வி துறையின் சார்பில், 3-வது மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (02.02.2024) தொடங்கி வைத்து வீரர், வீராங்கனைகளுடன் டேபிள் டென்னிஸ் விளையாடினார்கள்.

உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சி.நிர்மலாதேவி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags:    

Similar News