குழந்தைகளுக்கு தடகள போட்டி

தூத்துக்குடி உலக குழந்தைகளுக்கான தடகள நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தடகளக் கழகத்தின் சார்பில் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

Update: 2024-05-07 08:20 GMT

தடகள போட்டி 

உலக குழந்தைகளுக்கான தடகள நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு குழந்தைகளிடம் தடகள விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடகள போட்டிகளை நடத்தி பரிசு வழங்க வேண்டுமென இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்திருந்தது இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வைத்து குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம் ,தடை தாண்டும் ஓட்டம், பந்து எறிதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் நான்கு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தடகள கழக செயலாளர் பழனிச்சாமி பொருளாளர் அருள் சகாயம்,பயிற்சியாளர்கள் பத்மநாபன், ரஞ்சித், பூபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News