தனியார் கல்வி நிறுவனத்தில் விளையாட்டு விழா

கள்ளகுறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் குடியரசுதின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2024-01-27 08:38 GMT

விளையாட்டு விழா

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் குடியரசு தின விழா மற்றும் விளையாட்டு திருவிழா நடந்தது. விழாவிற்கு ஏ.கே.டி., பள்ளி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் வரவேற்றார். விழாவில் நீலமங்கலம் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் தேசிய கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் துரைராஜ், எல்.ஐ.சி., முகவர்கள் சங்க தலைவர் காசிலிங்கம் ஆகியோர் ஒலிம்பிக்கொடி மற்றும் விளையாட்டு கொடியினை ஏற்றி வைத்தனர். இதில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதேபோல் பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி பிரிவு முதல்வர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் இப்ராஹிம் ெஷரிப் நன்றி கூறினார்.
Tags:    

Similar News