ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா !
திண்டுக்கல் அருகே பி.கே. புதூரில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
Update: 2024-06-13 05:23 GMT
திண்டுக்கல் அருகே சிலுவத்தூர் அருகே பி.கே புதூரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இது 200 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். கேட்டவருக்கு கேட்ட வரம் தருகின்ற, அருளாசி வழங்குகின்ற கோவிலாக விளங்குகிறது. இந்த கோயில் புனரமைக்கப்பட்டது. கடந்த ஐந்து நாட்களாக யாகசாலை பூஜை நடந்தது.
இன்று காலையில் பூர்ணா குதி, குடம் புறப்பாடு,சிறப்பு பூஜை நடந்தது. பின்பு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். மேலும் நத்தம் ஒன்றிய தலைவர் ஆர் .வி .என். கண்ணன், மாவட்ட கவுன்சிலரும்,திமுக பொருளாளருமான விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர்.