குடிக்கும்போது மது கேட்டு கொடுக்காதவருக்கு கத்திக்குத்து

மயிலாடுதுறையில் மது தராதவரை கத்தியால் குத்தியவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-08 02:24 GMT

கத்தி குத்து

மயிலாடுதுறை அருகே செருதியூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பூராசாமி மகன் தர்மராஜ், இவர் சம்பவ தினத்தன்று மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் பிராந்தி குடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மயிலாடுதுறை கலைஞர் காலனியை சேர்ந்த சுரேஷ் (38) என்பவர் அவர் குடித்துக் கொண்டிருந்த பிராந்தி தீர்ந்து விட்டது, தர்மராஜியிடம் பிராந்தி கேட்டுள்ளார்.

அவர் கொடுக்க முடியாது என்று சொன்னதால் கோபமாகி கையில் வைத்திருந்த கத்தியால் தர்மராஜை குத்தி விட்டு ஓடி விட்டார், காயமடைந்த தர்மராஜ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அவர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News