விளைநிலங்களில் தேங்கும் தண்ணீர்

ஆவிச்சிபட்டியில் விளைநிலங்களில் தண்ணீர் தேங்குவதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-12-05 06:36 GMT

ஆவிச்சிபட்டியில் விளைநிலங்களில் தண்ணீர் தேங்குவதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நத்தம் ஆவிச்சிபட்டியில் பொதுப்பணித்துறை குளத்தில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் விளை நிலங்களில் தேங்குவதால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆவிச்சிபட்டியில் பூலான்குளம் உள்ளது.இந்தக் குளத்தைச் சுற்றி பல நுாறு ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளிட்ட விளை நிலங்கள் உள்ளன. பூலாங்குளத்தில் தண்ணீர் நிரம்பி அருகில் உள்ள விளை நிலங்கள் ,தென்னந்தோப்புகளில் தேங்கி நிற்கிறது. விவசாய பயிர்கள் அழுகும் நிலைக்கு வந்து விட்டன.

மா, தென்னை தோப்புகளும் பாதிக்கும் நிலை உள்ளது. இந்த நீரை வெளியேற்ற துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.

Tags:    

Similar News