விழுப்புரத்தில் மாநில மாநாடு சுடர் ஓட்டம்

விழுப்புரத்தில் மாநில மாநாடு சுடர் ஓட்டத்தை முன்னாள் அமைச்சர் பொன்முடி வரவேற்றார்.

Update: 2024-01-19 13:37 GMT

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் 

விழுப்புரம் தெற்கு மாவட்டத்திற்கு வருகை தரும் இளைஞர் அணி "மாநாட்டுச் சுடருக்கு" திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, மாவட்ட செயலாளர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக இளைஞர் அணி சார்பில் வரும் 21-ஆம் தேதி 2 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு, சென்னையிலிருந்து சேலம் மாநாட்டுத் திடல் நோக்கி செல்லும் மாநாட்டுச் சுடருக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி தலைமையில் இன்று விழுப்புரம் அண்ணாமலை உணவகம் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சிறிது தூரம் பொன்முடி சுடரை ஏந்தி சென்றார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பொன்முடி தெரிவிக்கையில், தற்போதைய திமுக தலைவர் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் இருக்கும்போதுதான் இளைஞர் அணி செயலாளராக இருக்கும் போது திமுக இளைஞரணி முதல் மாநாடு நடத்தப்பட்டது தற்போது உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக இருக்கும்பொழுது இரண்டாவது இளைஞர் அணி மாநில மாநாடு நடக்க உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பொன்முடி, சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என பொன்முடி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்எல்ஏ, விழுப்புரம் எம் எல் ஏ லட்சுமணன், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News