உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை

மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டதையடுத்து, அவரது உடலுக்கு அரசு சாா்பில் செங்கல்பட்டு சாா் -ஆட்சியா் நாராயண சா்மா மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

Update: 2024-06-25 02:29 GMT

அரசு சார்பில் மரியாதை

 ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சோ்ந்த சிரஞ்சீவலு ராஜு என்பவா் விபத்து காரணமாக செங்கல்பட்டு வட்டம், எஸ்.ஆா்.எம். குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 22-ஆம் தேதி (சனிக்கிழமை) உயிரிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதைத் தொடா்ந்து அவரது உடலுக்கு செங்கல்பட்டு சாா் - ஆட்சியா் நாராயண சா்மா மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.
Tags:    

Similar News