எஸ்டிபிஐ கட்சியினர் தமிழக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து ஆதரவு!

எஸ்டிபிஐ கட்சியினர் தமிழக முன்னாள் சி. விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து ஆதரவு பெற்றனர்.

Update: 2024-03-25 11:48 GMT
கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தமிழகத்தில் அடுத்த மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதன் தொடர்ச்சியாக தற்பொழுது அனைத்து கட்சியினரும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இன்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக தங்கவேல் அறிவிக்கப்பட்டு தற்பொழுது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார் இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் பாராளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியினர் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர், வடக்கு மாவட்ட கழக செயலாளரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் .சி. விஜயபாஸ்கரை இலுப்பூரில் உள்ள அமைச்சர் இல்லத்தில் நேரில் சந்தித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு நாங்களும் துணை நின்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்போம் என தெரிவித்தனர். அங்கு வந்தவர்களுக்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர். சி .விஜயபாஸ்கர் பொன்னாடை போற்றி வரவேற்றார் பின்னர் இலுப்பூரில் உள்ள கிராம மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மாபெரும் வெற்றி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் சென்ற இடமெல்லாம் முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கருக்கு பொதுமக்கள் இருகரம் கூப்பி வாழ்த்து தெரிவித்தார்கள் இந்நிகழ்ச்சியில் அதிமுக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News