திருடு போன லேப்டாப், பிரின்டர்

கரூர், ராயனூரில் உள்ள இ-சர்வீஸ் கடையில் லேப்டாப் மற்றும் பிரின்டரை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2024-01-10 12:34 GMT

ரூ.40,000 மதிப்புள்ள லேப்டாப் & பிரிண்டரை களவாடிய மர்மநபர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, ராயனூர், தீரன் நகர், 2வது தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மகன் வாசுதேவன் வயது 28. இவர் வெள்ளியனை காவல் நிலைய நிலைய எல்லைக்கு உட்பட்ட வால்காட்டுப்புதூர் பகுதியில் இ-சர்வீஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில்,கடந்த ஜனவரி 6ஆம் தேதி காலை 9 மணிக்கு, தனது கடையை பூட்டிவிட்டு, ஈரோட்டுக்கு சென்ற அவர், மீண்டும் ஜனவரி ஒன்பதாம் தேதி காலை 6 மணிக்கு கடை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடைக்குள் வைத்திருந்த லேப்டாப் மற்றும் பிரிண்டர் ஆகிய இரண்டு பொருள்களும் களவாடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

எனவே, இது குறித்து வெள்ளியணை காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சம்பவ இடத்தில் இரண்டு கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, களவாடிய மர்மநபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News