பட்டா கோரி முதியவா் உண்ணாவிரதம்

திருவிடைமருதூர் தாலுகா அலுவலக முன்பு பட்டா கோரி முதியவா் உண்ணாவிரத போராட்டம்.

Update: 2024-03-02 01:58 GMT
தஞ்சாவூர் மாவட்டம்  திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலகம் முன், பட்டா வழங்கக் கோரி முதியவா் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். திருவிடைமருதூா் வட்டம், தத்துவாஞ்சேரி உக்கரையைைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (66). இவா், பாஜகவின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாவட்டச் செயலராக இருந்து வருகிறாா். இவா் தனது மகனுக்கு வழங்கிய நிலத்துக்கு அவரது பெயருக்கு பட்டா வழங்கக் கோரி 6 மாதங்களுக்கு முன்பு திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா். ஆனால், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால், தனது மகனுக்கு பட்டா வழங்கக் கோரி திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா். தகவலறிந்த திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று முதியவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அப்போராட்டம் முடிந்த பிறகு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறையினா் உறுதியளித்தனா். இதன் பேரில் ராஜேந்திரன் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றாா்.
Tags:    

Similar News