மின் அலங்கார வாகனத்தில் அம்மன் வீதி உலா

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவின் கடைசி மின் அலங்கார வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

Update: 2024-04-12 08:56 GMT
சிவகாசி பங்குனி பொங்கல் கடை விழா.அம்மன் மின் அலங்காரத்தில் வீதி உலா...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் இந்து அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.பங்குனி பொங்கலின் கடைசி திருவிழாவான மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.பின்னர் அம்மனுக்கு பச்சை பட்டு உடுத்தி மேளம்,தாளம் முழங்க வாண வேடிக்கையுடன் மின் அலங்கார வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி அதிவிமர்ச்சியாக நடைப்பெற்றன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News