மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது!
செய்யாறு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.டி.ஐ மாணவனை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-04-06 06:32 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த ஐ.டி.ஐ. படிக்கும் 17 வயது மாணவர் தன்னை காதலிக்கும்படி தொந்தரவு செய்துள்ளார். தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவி செய்யாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்தனர்.